தொடர் மழையால் தஞ்சை மாவட்டம் முழுவதும் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
அதனால் இரு சக்கர, நான்கு சக்கர, பேருந்துகள் மற்றும் சுமையுந்துகள் அந்தப் பள்ளம் மேடுகளில் சிக்கித் தவிக்கின்றன, இரவு நேரங்களில் மின் விளக்குகளும் சரிவர ஏரியாத காரணத்தால் அந்த வழியாக செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள்.
பிள்ளையார்பட்டி, திருக்காட்டுப்பள்ளி,கள்ளபெரம்பூர், பூதலூர் அய்யம்பேட்டை மற்றும் அனைத்து நகர் மற்றும் கிராமங்களிலும் இதே நிலைமைதான்.
அது மட்டும் இல்லாமல் பல இடங்களில் தற்போது தெரு மற்றும் சாலை விளக்குகள் எரியாததால் மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சாலை முழுவதும் சேறும்,சகதியுமாக உள்ளது,மேலும் பல கிராமங்களில் தெருக்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது, அப்பகுதி மக்கள் சாலைகளை சீரமைத்தும், மின் விளக்குகளை சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.